திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி - சிங்கப்பூர் இடையே மேலும் 4 விமானங்கள் இயக்கம்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி சிங்கப்பூர் இடையே மேலும் 3 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஜூலை 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

திருச்சி: வந்தே பாரத் திட்டத்தின் மூலம் திருச்சி-சிங்கப்பூா் இடையே மேலும் 4 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஜூலை 9,12,14 ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

கொரோனோ வைரஸ் பாதிப்பினால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக தாயகம் வரமுடியாமல் சிக்கியிருந்த இந்தியர்களை வந்தே பாரத் திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
மூன்று கட்டங்களாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு அதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். தற்போது 4 ஆம் கட்டமாக ஜூலை 3ஆம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

Vande Bharat Mission: Air India to operate 4 flights between Trichy and Singapore

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. மேலும் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கும், சரக்கு சேவை விமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

கொரோனா, ஸ்பானிஷ் ப்ளூ.. 2 கொடிய வைரஸ்களை வீழ்த்திய சூப்பர் ஹீரோ.. டெல்லியில் 106 வயது முதியவர் சாதனைகொரோனா, ஸ்பானிஷ் ப்ளூ.. 2 கொடிய வைரஸ்களை வீழ்த்திய சூப்பர் ஹீரோ.. டெல்லியில் 106 வயது முதியவர் சாதனை

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து 4 ஆவது கட்டமாக, ஜூலை 3 ஆம் தேதி ஒரு விமானம் இயக்கப்பட்ட நிலையில் 9, 12, 14 ஆகிய தேதிகளிலும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் முற்பகல் 11 மணிக்கும், 12 ஆம் தேதி காலை 9 மணிக்கும், திருச்சியிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டுச் செல்கிறது. அதேபோல 9ஆம் தேதி மாலை 5.40க்கும், 12, 14 ஆம் தேதிகளில் இரவு 8.50க்கும் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானம் திருச்சி வந்து சோ்கிறது.

English summary
Air India to operate 3 flights between Trichy and Singapore from 9 -14 July in Vande Bharat Mission
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X