கேப்டனை சீண்டினால்.. பார்த்தீங்களா பாத்தீங்களா.. துரைமுருகனை விடாமல் சீண்டி வரும் தேமுதிக
பிரச்சாரத்தின்போது துரைமுருகனை விஜயபிரபாகரன் கடுமையாக தாக்கி பேசினார்.
Recommended Video
திருச்சி: "கேப்டனை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம்னு சொன்னோம்.. சீண்டினால், சேதாரம் உங்களுக்குத்தான் என்றும் அப்ப இருந்தே சொல்றோம். ஆனா தேவையில்லாமல் துரைமுருகன் கேப்டனை சீண்டி.. இப்போது வசமாக சிக்கிக்கொண்டார்" என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
செய்த சாதனைகளையும், செய்ய போற சாதனைகளையும் பற்றி பிரச்சாரம் செய்யாமல் தேமுதிக தனி தினுசாக பிரச்சாரம் செய்து வருகிறது.
துரைமுருகன் வீட்டில் செய்த ரெய்டு பற்றிதான் அம்மாவும்-பிள்ளையும் பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்கள். அதுவும் இந்த விஷயத்தில் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாமல், உடம்பு சரியில்லாமல் இருக்கும் விஜயகாந்த்துடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்!
ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளேன்.. ஆதரவு அளிப்பார்.. கமல்ஹாசன் பரபர பேட்டி!
பிரச்சாரம்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியபோது "விஜயகாந்தை பற்றி உங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும். கட்சியை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.
கேப்டனை சீண்டினால்?
கேப்டனை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம்னு சொன்னோம்.. சீண்டினால், சேதாரம் உங்களுக்குத்தான் என்றும் அப்ப இருந்தே சொல்றோம். ஆனால் தேவையில்லாமல் துரைமுருகன் கேப்டனை சீண்டி இப்போது வசமாக சிக்கிக்கொண்டார். திமுகவை சேர்ந்த எத்தனை பேர் உங்கள் நிலத்தை அபகரித்து இருந்தார்கள்? துரைமுருகன் வீட்டில் மூட்டைகளில் கத்தை, கத்தையாக பணம் எடுத்து இருக்கிறார்கள்.
மோடி அலை
கடந்த முறை தமிழ்நாட்டில் மோடி அலை வீசவில்லை. ஆனால் இந்த முறை தமிழகத்தில் கண்டிப்பாக மோடி அலை வீசும். பாஜக அபார வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீதமுள்ள 2 ஆண்டுகளும் தொடர வேண்டும்.
மெகா கூட்டணி
இது ஒரு மெகா கூட்டணி. தெய்வத்தாலும் மக்களாலும் உருவான கூட்டணி. இந்த கூட்டணியை யார் அழிக்க நினைக்கிறார்களோ அவர்கள் முட்டாள்கள். கூட்டணியை ஆதரிக்க நினைப்பவர்கள் தான் புத்திசாலிகள். போட்டி, பொறாமை, போலி கவுரவம் இது எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு எதிர்காலத்தை நினைத்து சிந்தித்து அனைவரும் செயல்படுங்கள்" என்றார்.