விஷாலுக்கு விண்ணப்பம் கூட எப்படி எழுதுவது என தெரியாது... எஸ்.வி.சேகர் தாக்கு
திருச்சி: வாய் ஜாலத்தால் நடிகர் விஷால் ஏமாற்றி வருவதாகவும், அவருக்கு விண்ணப்பம் கூட எப்படி எழுதுவது என தெரியவில்லை என்று நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் மே 14ஆம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தாலும், சங்கத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
இதனிடையே திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், வாய் ஜாலத்தால் நடிகர் விஷால் ஏமாற்றி வருவதாகவும், அவருக்கு விண்ணப்பம் கூட எப்படி எழுதுவது என தெரியவில்லை எனவும் விமர்சித்தார்.
நடிகர் சங்கத்திற்கு ராதிகா, டி.ராஜேந்தர் அல்லது தனது தலைமையிலோ சிறந்த குழு விரைவில் தலைமை ஏற்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மிஷன் சக்தி சோதனை.. விண்ணில் சிதறிய கழிவுகள் பெரும்பாலும் அழிந்து விட்டதாக டி.ஆர்.டி.ஓ தகவல்
இதனிடையே, முறைகேடு புகாரைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக குழுவுக்கு, தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.