திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முள் காட்டில் வைத்து 2 பேர்.. ரத்தப் பெருக்கு வந்ததால்.. பயந்து ஓடி விட்டனர்.. பதற வைத்த பலாத்காரம்

திருச்சி மார்க்கெட் பகுதியில் இளம்பெண்ணை நாசம் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

திருச்சி: "முள்காட்டில் என்னை 2 பேரும் சீரழித்தார்கள்.. ரத்தம் அதிகமாக வந்தது.. அதை பார்த்ததும் பயந்து ஓடிட்டாங்க" என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் 2 கொடூரர்கள் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள விசுவாச நகரில் ஒரு பெட்ரோல் பங்கு இருக்கிறது.. இந்த பங்குக்கு எதிரே முள்காடு ஒன்று உள்ளது.

இது பார்க்கவே ரொம்ப அடர்த்தியான காடுபோல இருக்கும்.. இங்கு சரக்கு ஆட்டோக்கள் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்... காடு பகுதி என்பதாலும், அங்கு லைட் வசதிகளும் இல்லாததாலும் ராத்திரி 7 மணி ஆகிவிட்டாலே கும்மிருட்டாக இருக்கும்... ஆள் நடமாட்டமும் இருக்காது.

கல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. ஷாக் ஆன முதும்பா!கல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. ஷாக் ஆன முதும்பா!

சோர்வு

சோர்வு

இந்த நிலையில் நேற்றிரவு 11 மணிக்கு ஒரு பெண் அந்த பகுதிக்கு வந்தார்.. வயது 25 இருக்கும்.. பார்க்கவே ரொம்ப சோர்வாக இருந்தார்.. அங்கிருந்த ஒரு செராமிக்கடை அருகில் தட்டு தடுமாறி வந்து உட்கார்ந்தார்.. அப்போது அங்கே வந்த வாட்ச்மேன் அந்த பெண்ணிடம் என்ன ஏதென்று விசாரித்தார்.

காந்தி மார்க்கெட்

காந்தி மார்க்கெட்

அப்போது அந்தப்பெண் தன்னை 2 இளைஞர்கள் இங்கே கடத்தி கொண்டு வந்து பலாத்காரம் செய்ததாகவும் இதில் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளதால், மயக்கமாக இருப்பதாகவும் சொன்னார்.. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாட்ச்மேன் உடனடயாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்து, அந்தப் பெண்ணை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

ஆட்டோ

ஆட்டோ

முதல்கட்ட சிகிச்சைக்கு பிறகு போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.. பெயர் லிடியா, திருச்சி ஜங்ஷனில் பிளாட்பாரத்தில் நேற்றிரவு 10 மணிக்கு வந்து நின்றிருக்கிறார்.. அங்கு 2 இளைஞர்கள் சரக்கு ஆட்டோவில் பெண்ணை வலுக்கட்டாயமாக ஏற்றி, முட்காட்டு பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். அந்த ஆட்டோவிலேயே வைத்து அவரை 2 பேரும் சீரழித்துள்ளனர்.. அப்போதுதான் ரத்தப்போக்கு அதிகமாக வந்துள்ளது.. அதை பார்த்து பயந்துபோன 2 இளைஞர்களும் பதறி அடித்து கொண்டு ஓடிவிட்டனராம்.

விசாரணை

விசாரணை

அவர்கள் யார் என்று தெரியவில்லை.. ஆனால் அவர்களின் அடையாளத்தை லிடியா போலீசாரிடம் சொல்லவும், தேடும் பணி நடக்கிறது. மேலும் மார்க்கெட் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராயை ஆய்வு செய்தால், ஆட்டோவில் லிடியாவை கடத்தி வருவதும் பதிவாகி உள்ளது.. இந்த சம்பவம் திருச்சி மக்களை உறைய வைத்துள்ளது.

English summary
25 year old young woman raped by two persons in trichy gandhi nagar market place
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X