நைட் நேரத்தில் புதருக்குள் ஒதுங்கிய ஜோடி.. கள்ளக்காதலனை கட்டி போட்டு.. பெண்ணை கதற கதற.. 3 பேர் கைது
திருச்சியில் பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் சீரழித்துள்ளது
திருச்சி: கள்ளக்காதலனை கட்டிப்போட்டுவிட்டு, இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கயவர்கள் கதற கதற பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் அந்த ஜோடி.. அந்த பெண்ணுக்கு 23 வயதாகிறது, அந்த ஆணுக்கு 24 வயதாகிறது.. இருவருமே கல்யாணம் ஆனவர்கள். இருவருமே விராலிமலையை சேர்ந்தவர்கள்.
ஒரே ஆபீஸ் என்பதால் இவர்களுக்குள் கள்ளக்காதல் ஆரம்பித்துள்ளது.. அதனால் வேலை முடிந்ததும், சாயங்கால நேரங்களில் தனியாக சந்திப்பதையும், ஜாலியாக இருப்பதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
அப்படித்தான், கடந்த 25ம் தேதி இருவருக்கும் வேலை முடிந்தது.. நைட் நேரம் ஆகிவிட்டதால், வீட்டுக்கு புறப்பட்டனர். பைக்கில் அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். வரும் வழியில், மணிகண்டம் பகுதியில் ரோட்டோரம் பைக்கை நிறுத்திவிட்டு, அங்கிருந்த புதர் பகுதியில் ஒதுங்கினர்.
உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திளைத்தபோதுதான், அங்கே 2 இளைஞர்கள் இந்த ஜோடியை சுற்றிக் கொண்டனர்.. அவர்கள் கையில் கத்தி உட்பட கூர்மையான ஆயுதங்கள் இருந்தன... அவர்களை பார்த்ததும் கள்ளக்காதலர்கள் ஷாக் அடைந்து, அங்கிருந்து கிளம்ப முயன்றனர்.. ஆனால், அந்த 3 பேரும் சேர்ந்து இளைஞரை அடித்து உதைத்து, கை, கால்களை கட்டி போட்டு, அவரிடமிருந்து செல்போன், பாக்கெட்டில் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டனர்.
பின்னர் 3 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். கிளம்பி செல்லும்போது, பெண்ணிடம் இருந்து இரண்டரை பவுன் கம்மல், செயின், வெள்ளிக்கொலுசு, செல்போன், ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு ஓடினர்.. இதையடுத்து, கள்ளக்காதலர்கள் இருவரும் விராலிமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.. ஆனால் தனித்தனியாகவே புகார்களை செய்தனர்..
அதிர்ச்சி.. மூச்சு திணறி திணறியே ரயிலில் உயிரிழந்த தொழிலாளி.. கொரோனா பாசிட்டிவ் வேறு.. பீகார் அவலம்
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, முருகன் 22, நந்தகுமார் 20, ஹெமராஜ் 28 ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.. விசாரணையில் பெண்ணை கதற கதற பலாத்காரம் செய்ததும், நகை, பணத்தை பிடுங்கி கொண்டு போனதும் நிரூபணமானது.. இதையடுத்து, அவர்களிடம் தொடர்விசாரணை நடந்து வருகிறது.