திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உங்க அம்மா வீடியோ அனுப்பு.." அராஜகம் செய்த காதலன்.. அப்படியே செய்த காதலி.. நடுங்கி போன திருச்சி!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி அருகே காதலித்து பழகிவந்த பெண்ணை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதோடு , பெண்ணின் தாய், தங்கை ஆகியோரின் ஆபாச படமும் எடுத்து தர சொல்லி கேட்டு மிரட்டிய காதலன் போலீசில் சிக்கியுள்ளான்.

Recommended Video

    உங்க அம்மா வீடியோ அனுப்பு.. அராஜகம் செய்த காதலன்.. அப்படியே செய்த காதலி.. நடுங்கி போன திருச்சி!

    3 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து ஆபாச காதலனை கைது செய்துள்ளனர் போலீசார். இந்த பகீர் சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.

    திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்தவர் மந்தனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது குடும்ப நண்பரான எழில் நகரைசேர்ந்த சதீஷ் என்பவருடன் பழகி வந்தார்.

    ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலிக்க தொடங்கினர்

    காவல் நிலையத்தில்.. காக்கி சட்டையில் காதல் டூயட்.. வசமாக சிக்கிய ஏட்டம்மா, ஏட்டையா.. எங்க தெரியுமா? காவல் நிலையத்தில்.. காக்கி சட்டையில் காதல் டூயட்.. வசமாக சிக்கிய ஏட்டம்மா, ஏட்டையா.. எங்க தெரியுமா?

    வெளியூரில் தொடர்ந்த காதல்

    வெளியூரில் தொடர்ந்த காதல்

    இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்ப்பதற்காக மந்தனா சென்றுள்ளார். இதேபோல் சதீஷ்குமாரும் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி கிடைத்து சென்றுள்ளார். அங்கு மந்தனாவிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக பழகி உள்ளார் சதீஷ் குமார்.

     ஓகே கண்மணி பாணியில் வாழ்க்கை

    ஓகே கண்மணி பாணியில் வாழ்க்கை

    இருவரும் வெளியூரில்தானே இருக்கிறோம். யாருக்கு தெரியப்போகிறது என நினைத்து, ஓகே கண்மணி திரைப்படத்தைப்போல லிவ்விங் டு கெதரில் வாழ முடிவு செய்துள்ளனர். எனவே, ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தியுள்ளனர். ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா. எதற்கும் தேவைப்படும் என நினைத்து, உல்லாசமாக இருந்ததை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார் சதீஷ்குமார்.

    கழற்றி விட்ட காதலன்

    கழற்றி விட்ட காதலன்

    ஆசை 60 நாள், மோகம் 30 நாள்தானே. மந்தனாவிடம் உல்லாச வாழ்க்கை சலிக்க தொடங்கியது சதீஷுக்கு. அதனால், வேறு ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அதே பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும், மந்தனாவிடம் ஒரே போடாக போட்டுள்ளார் சதீஷ். அதிர்ச்சியடைந்தார் மந்தனா. அழுது புரண்டுள்ளார். ஆனால் செல்போனில் எடுத்த வீடியோவை காட்டிய சதீஷ், இது வெளியே போகாமல் இருக்க வேண்டும்னா, என் வழியில் குறுக்கே வராதே என மிரட்டியுள்ளார். இதனால் மந்தனா, சதீஷ் வேறு பெண்ணை திருமணம் செய்ய ஓகே சொல்லிவிட்டார்.

    வேறு பெண்ணுடன் திருமணம்

    வேறு பெண்ணுடன் திருமணம்

    கடந்த 2020ஆம் ஆண்டு சதீஷுக்கும், அவர் காதலித்த வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சதீஷ் தனக்கு திருமணம் ஆன பிறகு சிறிது நாட்கள் கழித்து மீண்டும் மந்தனாவிடம் செல்போனில் பேசி பழகி வந்துள்ளார். என்னோடு மறுபடி உல்லாசமாக இருக்காவிட்டால் உன்னுடன் இருக்கும் நெருக்கமான வீடியோவை இணையதளத்தில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

     காதலியின் தாய் வீடியோ

    காதலியின் தாய் வீடியோ

    அத்தோடு விடவில்லை சதீஷ். என்ன சொன்னாலும் மந்தனா செய்வார் என்பதை புரிந்து வைத்திருந்ததால் அடுத்தகட்டத்திற்கு போய் விட்டாராம். ஆம்.. உன்னோட நிர்வாண படம் என்கிட்ட இருக்கு, எனக்கு உங்க அம்மா படம் பார்க்க ஆசை. அதை செல்போனில் வீடியோ எடுத்து அனுப்பு என மிரட்டியுள்ளார். பயந்து போன மந்தனா, தனது தாய் குளிக்கும் இடத்தில் செல்போனை மறைத்து வைத்தும், ஆடை மாற்றும் இடத்தில் செல்போனை வைத்தும், வீடியோ எடுத்து, அதை காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதை பார்த்து ரசித்த சதீஷ், மந்தனாவின் தங்கை வீடியோவையும் கேட்டுள்ளார். இதையும் அனுப்பி வைத்துள்ளார் மந்தனா.

    கண்டுபிடித்த குடும்பம்

    கண்டுபிடித்த குடும்பம்

    ஒரு கட்டத்தில், மந்தனா, ஒரு மார்க்கமாக செல்போனை வைத்துக் கொண்டு அலைவதை கண்டுபிடித்தனர் அவரது குடும்பத்தார். விசாரித்தபோது அழுதபடியே மந்தனா எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். ஆடிப்போன குடும்பத்தினர், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மந்தனாவை அழைத்துச் சென்று புகார் செய்ய வைத்துள்ளனர்.

    3 பிரிவுகளில் வழக்கு

    3 பிரிவுகளில் வழக்கு

    புகாரின் அடிப்படையில் சதீஷிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரின் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் சதீஷ் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 2 பிரிவுகளிலும், கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒரு பிரிவிலும் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தனர். திருமண ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் பழகி, அந்த பெண்ணின் அம்மா ஆபாச படத்தையும் கூட எடுத்து வைத்து மிரட்டிய காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    A man who fell in love with a woman near Trichy has taken a pornographic picture on his cell phone and threatened to take a pornographic picture of the girl's mother and sister. Police have arrested a porn lover after filing a case under 3 sections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X