கொடுமை.. தாயை பாத்ரூமில் தங்க வைத்து.. படுக்க பாய், லைட் இல்லை.. குளிரில் நடுங்கி.. சுருண்டு.. பகீர்
Recommended Video
தூத்துக்குடி: எவ்வளவு துணிச்சலும், கீழ்த்தரமான புத்தியும் இருந்தால், தாயை இவ்வளவு நாள் பாத்ரூமில் தங்க வைத்திருப்பார்கள்? இப்படி கொடுமை இந்த தமிழகத்தின் மண்ணில் நடந்துள்ளது!
தூத்துக்குடி மாவட்டம் கோட்ஸ் நகரைச் சேர்ந்த சேர்ந்தவர் நிகோலஸ்.. இவரது வளர்ப்பு தாய்தான் மரிய மிக்கேல்.. பெற்ற அம்மாவின் உடன்பிறந்த சகோதரி.. இவர்தான் நிகோலஸை வளர்த்தவர்.. 92 வயதாகிறது!
மரிய மிக்கேலை சரியாக நிகோலஸ் கவனிக்கவில்லை என்றும், அவரை கழிவறையில் தங்கவைத்து கொடுமைப்படுத்துவதாகவும் தகவல் வெளிவந்தது.
காப்பான் பாணியில் வெட்டுக்கிளிகள் பயங்கரம்.. அழிக்கப்படும் பயிர்கள்.. குலைநடுங்கும் விவசாயிகள்
இருட்டறை
இதையடுத்து, மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் சமூக நலத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போதுதான் அந்த பாத்ரூமில் மரிய மிக்கேல் இருப்பதை பார்த்தனர். அந்த கழிவறை வீட்டின் உள்ளேகூட இல்லை.. வெளியே இருக்கிறது.. இருட்டாக உள்ளது.. பாத்ரூம் உள்ளேயும், வெளியேயும் ஒரே குப்பை கூலங்கள் கொட்டி கிடக்கின்றன.
மரிய மிக்கேல்
கதவு இல்லை.. குளிரால் மரிய மிக்கேல் சுருங்கி.. நடுங்கி படுத்துகொண்டிருந்தார். கழிவறை பக்கெட்டும், மரிய மிக்கேல் சாப்பிடும் தட்டும் பக்கத்தில் பக்கத்திலேயே உள்ளன... மரிய மிக்கேல் படுக்க பாயும் இல்லை..வெறும் பாத்ரூம் தரையிலேயே அப்படியே படுத்து கிடந்தார். அந்த பாத்ரூமுக்கு லைட் கிடையாது.. இரவில் எப்படி தூங்குவார், எந்த பூச்சி, புழுக்கள் நுழைந்தாலும் தெரிய வாய்ப்பில்லை.
அதிர்ச்சி காட்சி
அப்படியே ஏதாவது கடித்தாலும் கத்தி கூப்பாடு போட்டு அழைக்கும் அளவுக்கு மரிய மிக்கேலுக்கு தெம்பு இல்லை.. மொத்த வாழ்வையும் தொலைத்துவிட்டதை அவரது கோலமே காட்டி கொடுத்தது.. இந்த குடும்பத்தில் இவருக்கு சாப்பாடு எப்படி போட்டு வந்தார்களோ தெரியாது! இந்த காட்சியை கண்டதும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவரை அங்கிருந்து மீட்டு கருணை இல்லத்தில் அனுமதித்துள்ளனர்.
வைரல் வீடியோ
பிறகு சமூக நலத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், மரிய மிக்கேலை சரியாக பராமரிக்காத நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!! இது சம்பந்தமாக அதிகாரிகள் சென்றபோது, இந்த கொடிய காட்சியை வீடியோ எடுத்துள்ளனர்.. அது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது!
கண்ணதாசன் சொன்ன "நன்றிகெட்ட மனிதர்களைவிட நாய்கள் மேலடா" என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது!