சந்தியாவின் அழகை கெடுக்க பலமுறை ஆள்வைத்து மொட்டை போட்டுவிட்ட பாலகிருஷ்ணன்- தாயார் கண்ணீர் பேட்டி
தூத்துக்குடி: சந்தியாவின் அழகை கெடுக்க பல முறை அவருக்கு ஆளை வைத்து கணவர் பாலகிருஷ்ணன் மொட்டை போட்டுள்ளதாக அவரது தாயார் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
சென்னை பெருங்குடி பகுதியில் குப்பை மேட்டில் குப்பைகளை ஊழியர்கள் தரம் பிரித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு சாக்கு மூட்டையை பிரித்த போது அதில் கை, கால்கள் இருந்தது.
இதையடுத்து பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் துண்டு துண்டாக உடல் பாகங்கள் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்பது தெரியவந்தது. இவர் ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்தவர் என்பது தெரியவந்தது.
ஒப்புதல் வாக்குமூலம்
இதையடுத்து போலீஸார் அவரது கணவர் பாலகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் சந்தியாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
16 வயது
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து சந்தியாவின் தாய் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த போது 16 வயது. பெரியோர்கள் பார்த்து வைத்த திருமணம்தான்.
கொடுமை
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தூத்துக்குடியில் எங்கள் வீட்டுக்கு வந்த சந்தியா எங்களிடம் இருந்து ரூ. 75 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டார். கணவர் கொடுமைப்படுத்துவதை அவர் எங்களிடம் கூறியதே இல்லை.
பாலகிருஷ்ணன்
சந்தியா வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி முதல் என்னுடன் சந்தியா பேசவில்லை. இதனால் எனது மாப்பிள்ளை பாலகிருஷ்ணனுக்கு போன் செய்து கேட்டபோது சந்தியா வெளிநாடு சென்றுவிட்டார் என்றார்.
தூத்துக்குடி
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து சந்தியாவின் தாய் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த போது 16 வயது. பெரியோர்கள் பார்த்து வைத்த திருமணம்தான்.
புகார் கொடுத்தோம்
இதற்காக தூத்துக்குடி போலீஸார் விசாரிக்க என்னை தொடர்பு கொண்ட போதுதான் மகள் காணாமல் போன விவரம் எங்களுக்கு தெரியவந்தது. பின்னர் டிவியில் காட்டப்பட்ட அவரது கை, கால்களில் பச்சை குத்திய அடையாளத்தை வைத்து போலீஸில் நாங்களும் புகார் கொடுத்தோம்.
மொட்டை
என் மகளுக்கு பாலகிருஷ்ணன் பல முறை மொட்டை அடித்துள்ளார். அவருக்கு என் மகள் மீது எப்போதும் சந்தேகம்தான் என சந்தியாவின் தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.