தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டென்ஷனில் தூத்துக்குடி.. போலீஸ் மீது குண்டு வீச்சு.. போலீஸ்காரர் மரணம்.. குண்டு வீசிய ரவுடியும் பலி

நாட்டு வெடிகுண்டு வீசியதில் போலீஸ்காரர் பலியானார்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: காட்டுக்குள் போலீஸை பார்த்ததுமே எகிறி குதித்து தப்பி ஓடினார் ரவுடி துரைமுத்து.. தன்னை துரத்தி வந்த போலீஸ்காரர்கள் மீது அவர் வெடிகுண்டை வீசியதில், சுப்பிரமணி என்பவர் ரத்த வெள்ளத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.. இதையடுத்து தூத்துக்குடியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

ரவுடி ஒருவரை தூத்துக்குடி போலீசார் ரொம்ப நாளாக தேடி வந்தனர்.. இவர் மணக்கரை பகுதியை சேர்ந்தவர்.. பெயர் துரைமுத்து.. ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்.

Bomb policeman killed in Vallanadu forest area in thoothukudi

இந்நிலையில், வல்லநாடு மனக்கரை காட்டு பகுதியில் இந்த ரவுடி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. அதனால் விரைந்து சென்று அந்த காட்டுக்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.. அப்போது அந்த ரவுடியையும் காட்டுக்குள் கண்டுபிடித்துவிட்டனர்.

அவரை கைது செய்ய முயன்றபோது, போலீசாரை பார்த்ததும் நல்லமுத்து தப்பி ஓட முயன்றார்.. மேலும் போலீசார் தன்னை கைது செய்ய கூடாது என்பதற்காக, அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார்.. இந்த வெடிகுண்டு, போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவர் மீது பட்டுவிட்டது.

இதில், ரத்த வெள்ளத்தில் சுப்பிரமணி அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.. இதனால், அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் அவரது உடலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.. இந்த வெடிகுண்டு வீச்சில் மேலும் போலீஸ்காரர் படுகாயம் அடைந்து உள்ளார். அவருக்கும் தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. அவர் சீரியஸாக இருக்கிறாராம்.

எனினும் காட்டுப் பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.. கடைசியில் படுகாயங்களுடன் துரைமுத்துவை கைது செய்துவிட்டனர்.. அவரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, துரைமுத்துவும் உயிரிழந்தார்.

காட்டு பகுதியில் ஆயுதங்களுடன் வாகனம் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்... துரைமுத்துவுடன் மேலும் 2 குற்றவாளிகள் இருந்தனர்.. அவர்களை துரத்தி பிடிக்கும் பணி நடக்கிறது.. இவர்களுக்கு எவ்வாறு ஆயுதங்கள் கிடைத்தது? மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தகவலறிந்த மாவட்ட எஸ்பி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்... இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

English summary
Bomb policeman killed in Vallanadu forest area in thoothukudi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X