தூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: தூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அல்கெராபி நிறுவனம் அமைப்பதற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அல்கெராபி நிறுவனம் அமைப்பதற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூரில் மின்சார வாகன தயாரிப்பு ஆலை அமைப்பதற்கும் சீனாவின் விண்டெக் நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தென் மாவட்டங்களில் 6 புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.