ஸ்டாலின் நாட்டின் ஜனாதிபதியாக வருவார்: அதற்கான தகுதி அவருக்கு உள்ளது.. அடித்து சொல்லும் துரைமுருகன்!
Recommended Video
தூத்துக்குடி: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாட்டின் ஜனாதிபதியாக வரும் தகுதியும் வாய்ப்பும் உள்ளது என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் திமுகவின் பொருளாளருமான துரைமுருகன் எப்போதும் காமெடியாக பேசுவதிலும் டைமிங்கில் கலாய்ப்பதிலும் கெட்டிக்காரர். அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போதுகூட அசால்ட்டாக அந்த சூழ்நிலையை கையாண்டார்.
ஆட்சியாளர்களின் குறைகளை எடுத்து கூறும் துரைமுருகன் நல்ல திட்டங்களை சட்டசபையிலேயே பாராட்டியுள்ளார். துரைமுருகனின் ஹியூமர் சென்ஸை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே பாராட்டியுள்ளார்.
நீங்க போய் பேசிடுங்க.. ஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்.. பாஜக தூது.. அமித் ஷாவின் ராஜதந்திரம்!
துரைமுருகன் புகழாரம்
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்பிக் நகரில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய துரைமுருகன், திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார்.
ஜனாதிபதியாக வருவார்
அவர் பேசியதாவது, ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை. 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வரும் தகுதியும் வாய்ப்பும் உள்ளவர் ஸ்டாலின்.
ராகுல் பெயரை கூறியவர்
இந்த தேர்தலில் பிரதமர் மோடியா? ராகுலா? என விவாதம் வந்ததற்கு காரணம் ஸ்டாலின் தான். அவர் ராகுல்காந்தி பெயரை குறிப்பிடாவிட்டால் மோடியா? அல்லது வேறுயாரவது என வந்திருக்கும்.
தாய் மீது சத்தியம்
தி.மு.க தலைவர் ஸ்டாலினை தலைகுனிய வைக்கமாட்டோம் என தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்களின் தாய் மீது சத்தியம் செய்து களத்தில் பணியாற்ற வேண்டும். அப்போது தான் சிறப்பாக பணி செய்வீர்கள்.
குரூப் பாலிடிக்ஸை உருவாக்குகிறேன்
கட்சியில் உள்ள பூசல்களை தேர்தல் முடியும்வரை மறக்க வேண்டும். தேர்தல் முடிந்தபின்னர் நானே வந்து குரூப் பாலிடிக்ஸை உருவாக்கி தருகிறேன். இவ்வாறு துரைமுருகன் நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றினார்.