குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி: தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று தசரா திருவிழா தொடங்கியது. காலை 9.30 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று தொடங்கியது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும். மைசூர் தசரா விழாவிற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

சுற்று வட்டாரபகுதியில் உள்ள பக்தர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விரதம் இருந்து வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். குலசை கோவிலில்அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் சமேதராய் அம்மையும் அப்பனுமாக ஒருசேர வீற்றிருப்பர். இந்தாண்டுக்கான தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
முன்னதாக 14ம்தேதி காலை 11 மணிக்கு காளி பூஜை, 12 மணிக்கு அன்னதானம், நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த காளி வேடம் அணியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இன்று காலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் இந்த திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும். 10 ஆம் நாளான வரும் 24 ஆம் தேதி இரவு 11 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையடுத்து மறுநாள் மாலை 4 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்படும். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு கழற்றப்பட்டு தங்கள் விரதத்தை முடித்துக்கொள்வர்.











Click it and Unblock the Notifications