"ஏர் பேக்" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி!
தூத்துக்குடி: வேகமாக வந்த கார்.. ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் மோதியதில் பிரபல ஹோட்டல் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.. காரில் இருந்த ஏர் பேக் இரு பக்கமும் விரிந்தும்.. உயிர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்தவர் கிட்டப்பா.. அர்ச்சனா ஹோட்டல், உதயம் காபி பார், கிட்டு காபி பார் அதிபர்.. இவர் ஒரு ஆன்மிகவாதியும்கூட... திருச்செந்தூர் மக்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலமான நபர் இவர்.. 51 வயதாகிறது.
வசந்தி என்ற மனைவியும், சக்தி என்ற 22, கந்தன் 16 என்ற 2 மகன்களும் உள்ளனர். ஒருவர் காலேஜிலும், இன்னொரு மகன் பள்ளியிலும் படித்து வருகிறார்கள்.
திருச்செந்தூர் சாந்தி பேக்கரி அதிபர் ராதாகிருஷ்ணன் இவரது நெருங்கிய நண்பர் ஆவார். இவர்கள் இருவரும் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, இன்று தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கிட்டப்பாதான் ஓட்டி சென்றார்.
விடிகாலை நேரம்.. முக்காணி அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நடுரோட்டில் தாறுமாறாக ஓடி, ரோட்டோரம் இருந்த புளியமரத்தில் பலமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. கிட்டப்பாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராதாகிருஷ்ணன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். தகவலறிந்த ஆத்தூர் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிட்டப்பா பலியானதால், திருச்செந்தூர் மக்கள் சோகத்தில் உள்ளனர்.
ராகுல் காந்தி அப்படி பேசக்கூடாது.. பாஜக மாதிரியே கொந்தளிக்கும் சிவ சேனா.. சரியா போச்சு!
அதிகாலை நேரம் என்பதால், தூக்க கலக்கத்தில் வண்டியை ஓட்டினாரா அல்லது காரில் ஏதாவது பிரச்சனையா என்று தெரியவில்லை. ஆனால் கார் புளிய மரத்தில் மோதியபோது காரில் இருந்த ஏர்பேக் விரிந்துள்ளது. இருந்தாலும், விபத்தில் கிட்டப்பா உயிரிழந்தது கடுமையான அதிர்ச்சியை தந்துள்ளது.