திருச்செந்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணிய ஆதித்தன் காலமானார்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 72.
திருச்செந்தூர் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில், சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1984 முதல் 1989 வரை சட்டசபை உறுப்பினராக பணியாற்றியவர். மேலும், 1982 முதல் 1987 வரை இரண்டு முறை திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி தேவஸ்தானத்தின் தர்க்காராக இருந்துள்ளார்.
ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுன்சில் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் சுப்பிரமணிய ஆதித்தன்.
தூத்துக்குடி மாவட்ட அரசியலில் செல்வாக்குடன் விளங்கியவர், சுப்பிரமணிய ஆதித்தன். இவரது, நல்லடக்கம் நாளை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 14ம் தேதி சிறையிலிருந்து சசிகலா விடுதலை.. பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி பரபரப்பு தகவல்