தெரியாமத்தான் கேட்கிறேன்.. தேர்தல் ஆணையம் என்ன அதிமுகவின் கிளையா.. ராஜேந்திர பாலாஜி கோபம்
தூத்துக்குடி: தங்களுக்கு சாதகமாக செயல்பட தேர்தல் ஆணையம் என்ன அதிமுகவின் கிளை கழகமா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையம் ஆளும் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றன.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு ஆணையமாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.
மோடி.. நிதின் கட்கரி யாரும் வேண்டாம்.. மெஜாரிட்டி இல்லையெனில் இவர்தான் பிரதமர்.. பாஜக திட்டம்!
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, ஆட்சி அமைத்து விடலாம் என தினகரனும், ஸ்டாலினும் போடும் கணக்கு பொய்க் கணக்கு. முதல்வர் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு தெய்வ கணக்கு.
தோல்வி அடையப் போவது தெரிந்தே தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் பழிபோடுகின்றன. எங்களுக்கு சாதகமாக செயல்படுவதற்கு தேர்தல் ஆணையம் என்ன அதிமுகவின் கிளைக் கழகமா? இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.