ஒட்டப்பிடாரத்தில் படகோட்டியாக மாறிய அமைச்சர்.. மீனவர்களிடம் வாக்குச் சேகரிப்பு
ஒட்டப்பிடாரம்: ஒட்டப்பிடாரத்தில் படகோட்டியாக மாறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீனவர்களிடம் வாக்குச் சேகரித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில் ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி வேட்பாளர் பி. மோகனை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரசாரம் செய்து வருகிறார். அவர் இன்று மீனவ மக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கப்பலை தானே இயக்கினார். அங்கிருந்த மீனவர்களிடம் அதிமுகவுக்காக வாக்குச் சேகரித்தார்.
நல்லா பாருங்க.. ரெண்டு பக்கமும் பாருங்க.. எம்புட்டுக் கூட்டம் பாருங்க.. பெருமித மோடி!
English summary
Minister Rajendra Balaji operates boat himself and ask vote for Ottapidaram ADMK candidate from fishermen.
Story first published: Thursday, May 9, 2019, 15:15 [IST]