எடப்பாடி பழனிச்சாமியின் அராஜக ஆட்சிக்கு மே 19-ஆம் தேதி கடைசி மணி அடிக்க தயாராகுங்கள்- ஸ்டாலின்
ஒட்டப்பிடாரம்: எடப்பாடி பழனிச்சாமியின் அராஜக ஆட்சிக்கு மே 19-ஆம் தேதி கடைசி மணி அடிக்க தயாராகுங்கள் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அவர் பேசுகையில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்விகள் எழுப்பினேன். ஆனால் அவற்றுக்கு அவர் இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியின் அராஜக ஆட்சிக்கு மே 19-ஆம் தேதி கடைசி மணி அடிக்க தயாராகுங்கள்.
ஜெயலலிதா வானத்திலிருந்து அதிமுகவை பார்க்கிறார்.. அந்த பயம் எங்களுக்கு உள்ளது.. ஓபிஎஸ் உருக்கம்!
தூத்துக்குடி - சென்னை இடையே புதிய ரயில் இயக்கப்படும். ஒட்டபிடாரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய போக்குவரத்து பணிமனை அமைக்கப்படும். 22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்றார் ஸ்டாலின்.