நடிகர் விஜய் பயப்படக்கூடாது.. உறுதுணையாக இருப்பேன்.. சீமான் பேச்சு
தூத்துக்குடி: நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில், பிகில் திரைப்பட விவகாரத்தில் அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இதுபோல் செய்வதால் ஜனநாயகத்துக்கு மக்கள் மீது வெறுப்பு ஏற்படும்.
கத்தி, சர்கார் படங்களை போல் பிகில் பிரச்சனையில் விஜய்க்கு உறுதுணையாக இருக்க போகிறேன். பிகில் பாடல் வெளியிட்டு விழாவில் விஜய் பேசியதை மனதில் வைத்து வன்மத்துடன் இப்படி செய்கிறார்கள். பிகில் படத்துக்கு இடையூறு செய்வது நல்லதல்ல என்றார்.
தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்கிறோம்... தமிழக காங்கிரஸ் அறிவிப்பு
இதனிடையே விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி உள்ளிட்ட இரண்டு தொகுதிகளிலும் அதிமுக பணத்தால் வெற்றி பெற்றுள்ளதாக என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.