ஒட்டப்பிடாரம்... முன்னாள் எம்எல்ஏ... ஓ.எஸ்.வேலுச்சாமி... காலமானார்!!
தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் சட்டசபைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இவர் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் 1977 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ஓ.எஸ்.வேலுச்சாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு வயது 88. இவர் 1980ஆம் ஆண்டு வரை சட்டசபை உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இத்துடன், கோவில்பட்டி காந்தி மண்டபம் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து வந்தார். இவருக்கு ரஞ்சிதம்மாள் என்ற மனைவியும், சுந்தரம் என்ற மகனும், மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இவருக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
Comments
English summary
Ottapidaram Former Congress MLA OS Velusamy dies
Story first published: Thursday, August 20, 2020, 12:51 [IST]