திமுக பிரமுகர் காரில் ரூ.40 லட்சம் பறிமுதல்.. விரட்டி பிடித்தது தேர்தல் பறக்கும் படை
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே திமுக பிரமுகர் சென்ற காரில் இருந்து ரூ.40 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனை நடத்தினர். திருச்செந்தூர் அருகே அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்த போது வேகமாக வந்த ஒரு கார், நிற்காகமல் தாண்டி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
விழுப்புரத்தில் யாருக்கு வெற்றி? கடந்த கால தேர்தல் வரலாறு என்ன சொல்கிறது.. இதை பாருங்க!
அந்த கார் திமுக பொதுக்குழு உறுப்பினர் கொட்டங்காடு வசீகரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த காரை சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் ரூ.40 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் கோவில்பட்டி அருகே உருளைக்குடி கிராமத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.75 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
எனது ஓட்டு ஸ்டாலினுக்குத்தான்.. அதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பரபரப்பு பேச்சு