தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் வழக்கு.. பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தொடர்பில்லை.. 5 தன்னார்வளர்களிடம் சிபிசிஐடி விசாரணை!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் சந்தேகத்திற்குரிய 5 தன்னார்வளர்கள் மீது சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இதில் சிபிசிஐடி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் எஸ்ஐ ராகுகணேஷ், முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் சிபிசிஐடி மூலம் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்டு வந்த குற்றவாளியான காவலர் முத்துராஜ் தற்போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் பற்றி பொய்யாக பரவும் செய்திகள், போட்டோஸ்.. சிபிசிஐடி எச்சரிக்கை சாத்தான்குளம்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் பற்றி பொய்யாக பரவும் செய்திகள், போட்டோஸ்.. சிபிசிஐடி எச்சரிக்கை

இன்று என்ன

இன்று என்ன

இந்த நிலையில் சாத்தான்குளம் வழக்கில் சந்தேகத்திற்குரிய 5 தன்னார்வளர்கள் மீது சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த 5 பேரும் தந்தை - மகன் சித்திரவதையில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் சிபிசிஐடி போலீஸ் சந்தேகம் கொண்டுள்ளது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள் எழுந்தது. பலர் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தனர். தனியார் அமைப்புகள் சிலவற்றுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

என்ன சந்தேகம்

என்ன சந்தேகம்

இந்த நிலையில் தற்போது சந்தேகத்திற்குரிய 5 தன்னார்வளர்கள் மீது சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இதில் இரண்டு பேர் பேசிய ஆடியோ ஒன்றும் இணையத்தில் கசிந்தது. இந்த ஆடியோ குறித்தும் தற்போது சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த 5 பேர் யார் என்று விவரம் வெளியாகவில்லை. அதேபோல் இவர்கள் எந்த அமைப்பில் வேலை பார்க்கிறார்கள் என்பது குறித்தும் விவரம் வெளியாகவில்லை.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

அதேபோல் இன்னொரு பக்கம் இந்த வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அவர்களை சாத்தான்குளம் சம்பவத்தின் போது போலீசுக்கு உதவி செய்யவில்லை. சாத்தான்குளம் துணை சரகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் யாரும் வேலை செய்யவில்லை என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

தொடர்பு இல்லை

தொடர்பு இல்லை

முன்னதாக சாத்தான்குளம் வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குறித்து புகார் வைக்கப்பட்டது. இதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று பலர் சந்தேகம் எழுப்பி இருந்தனர். சில அரசியல்வாதிகள் கூட இது தொடர்பாக கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி இருந்தனர். இந்தநிலையில் இந்த கேள்விகளுக்கும் தற்போது சிபிசிஐடி மறுப்பு தெரிவித்துள்ளது.

English summary
Sathankulam Death: No friends of police connection, CBCID investigates 5 volunteers in the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X