தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவை ஒழித்துவிட்டால் அதிமுக ஒழிந்துவிடும்.. தமிழகம் கறை படிய காரணம் திமுகதான்.. சீமான் அட்டாக்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: "திமுகவை ஒழித்துவிட்டால் அதிமுக ஒழிந்து விடும். தமிழகம் கறை படுவதற்கு முழு முதல் காரணமே திமுகதான். அவர்களிடம் படித்து வந்தவர்கள் தான் அதிமுகவினர்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யாவை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

Seeman campaigned in Ottapidaram and slams AIADMK and DMK

"அதிமுகவுக்கு இன்னும் ஒன்றரை வருஷம்தான் ஆட்சி. பிறகு வரலாற்றிலேயே அதிமுக இருக்காது. ஜெயலலிதா இறந்த பிறகு, ஒரு சீட் கூட வாங்காத பாஜக தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது.

ஜெயலலிதா இருந்து இருந்தால், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார். இப்போது அதிமுகவை மிரட்டிதான் பாஜக கூட்டணி வைத்துள்ளது.

எல்லாம் நன்றாக நடந்தால்.. பிரதமர் ஆசையை வெளிப்படுத்தினார் மாயாவதி.. தேசிய அரசியலில் திருப்பம்! எல்லாம் நன்றாக நடந்தால்.. பிரதமர் ஆசையை வெளிப்படுத்தினார் மாயாவதி.. தேசிய அரசியலில் திருப்பம்!

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, லஞ்ச ஊழல் ஒழியும், கருப்பு பணம் ஒழியும் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுபோலவே தீவிரவாதம் ஒழியும் என்றார்கள். ஆனால் பயங்கரவார தாக்குதல் நடந்து வருகிறது. சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. அதிமுக திரும்பவும் வெற்றி பெற்றால், இது போன்ற ஊழல் தொடரவே செய்யும்.

திமுகவை ஒழித்துவிட்டால் அதிமுக ஒழிந்து விடும். தமிழகம் கறை படுவதற்கு முழு முதல் காரணமே திமுகதான். அவர்களிடம் படித்து வந்தவர்கள் தான் அதிமுகவினர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு தரமான மருத்துவம் வழங்குவோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இந்த மண்ணில் இருந்து நிச்சயம் அகற்றப்படும்" என்றார்.

English summary
Seeman campaigned for Agalya in Ottapidaram and slams BJP, ADMK, DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X