ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன்? சீமானுக்கு சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் கடந்த வருடம் ஜூன் மாதம் நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.
இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். எதிர்ப்புகளை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்
கலந்து கொண்டார்
இந்த துப்பாக்கி சூடு குறித்த தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடம் ஆகியும் கூட இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி கடற்கரை சாலையிலுள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றார்.
ஆனால் முன்னேற்றம் இல்லை
இதில் பெரிதாக அரசு தரப்பை சேர்ந்த அதிகாரிகள் யாரும் இன்னும் விசாரிக்கப்படவில்லை. இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
என்ன பேசினார்
கடந்த வருடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். மக்கள் முன்னிலையில் அவர் பேசினார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்ட்டுள்ளது.
அருணா ஜெகதீசன் முன்பு
அருணா ஜெகதீசன் முன்பு நேரில் ஆஜராகி சீமான் விளக்கம் அளிக்க வேண்டும் , போன் மூலம் பேச கூடாது, என்று கூறப்பட்டுள்ளது. சீமான் மட்டுமின்றி திமுகவை சேர்ந்த சில உறுப்பினர்கள். சில சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் இது போல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.