திருச்செந்தூர் கும்பாபிஷேகம்: 600 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை.. கோவில் வாசலுக்கே ஸ்பெஷல் பஸ்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வாசலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thiruchendur temple bus

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 7 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ஜூலை 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கீழ்கண்ட இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும் மற்றும் ஜூலை 7 ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

Thiruchendur temple bus

சென்னை, திருச்சி, புதுச்சேரி. கும்பகோணம், சேலம், பெங்களூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தச் சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பக்தர்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை கோட்டம் சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த மூன்று தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்தும் தலா 10 சிறப்பு பேருந்துகள் வீதம் மொத்தம் 30 சிறப்பு பேருந்துகள் திருச்செந்தூர் கோவில் வாசலுக்கு இயக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+