ராகுலை பிரதமர் வேட்பாளராக்கிய ஸ்டாலின் கேபினட் அமைச்சர் பதவிக்காக மோடியுடன் பேசி வருகிறார்.. தமிழிசை
Recommended Video
தூத்துக்குடி: ராகுலை பிரதமர் வேட்பாளராக்கிய ஸ்டாலின் கேபினட் அமைச்சர் பதவிக்காக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பகீர் தகவலை அளித்துள்ளார்.
மே 23-ஆம் தேதிக்கு முன்னராக தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து வருகிறார்.
இதுகுறித்து திமுக கூறுகையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. சந்திரசேகர ராவ் 3-ஆவது அணியை அமைக்க தமிழகம் வரவில்லை என தெரிவித்துள்ளது. அதுபோல் 3-ஆவது அணி அமைய வாய்ப்பில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இறந்து போன தனுஜா குரலில் பேசிய ஐயர்.. "நான் தெய்வம் ஆயிட்டேன்".. திருச்சி அருகே நூதனம்!
திமுக சவாரி
இந்த நிலையில் கேசிஆர்- ஸ்டாலின் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போல் ஒரே நேரத்தில் இரு படகுகளில் திமுக சவாரி செய்யும்.
செய்தியாளர்களை சந்திக்கவில்லை
5 கேபினட் அமைச்சர்கள் பதவி கேட்டு டெல்லிக்கே தூதுவிட்டுள்ளது திமுக என விமர்சனம் செய்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சந்திரசேகரராவ் பாஜகவின் பி டீமாக கூறப்படும் நிலையில் சந்திப்புக்கு பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
கேசிஆருடன் பேச்சு
இந்த நிலையில் அமைச்சரின் கருத்து குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தமிழிசை கூறுகையில் உண்மைதான் என்றார். அவர் மேலும் பேசுகையில் முதலில் ராகுலை பிரதமர் வேட்பாளர் என கூறிய ஸ்டாலின் பின்னர் கேசிஆருடன் பேசினார்.
நிறம் மாறும் ஸ்டாலின்
மற்றொரு புறம் மோடியுடனும் பேசி வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் நிறம் மாறி கொண்டிருக்கிறார். பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார் ஸ்டாலின் என தமிழிசை கூறியுள்ளார்.