ஒளியிலே.. தெரிவது.. அட இருளில் மலர்ந்த தமிழிசையின் முகம்... தூத்துக்குடி பிரச்சாரத்தில் பளிச்!
தமிழிசையின் பிரச்சாரம் சம்பந்தப்பட்ட ட்வீட் ஒன்றிற்கு கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
தூத்துக்குடி: அந்த இடமே ஒரே கும்மிருட்டாக இருந்தது.. திடீரென ஒரு வெளிச்சம்.. அதில் பளிச்சென மின்னினார் தமிழிசை சவுந்தராஜன்!
ஆளுக்கு ஒரு பக்கம் அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் தூத்துக்குடியில் இரண்டு பெண் பிரபலங்களும் மக்களை வளைத்து வளைத்து சந்தித்து ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
தங்களது பிரச்சாரங்கள் குறித்த விவரங்களை ட்வீட்களை இருவருமே ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். இப்படித்தான் தமிழக பாஜக தலைவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
சிக்கல் வர்மாவின் இயக்கத்தில் சசிகலா.. புது குண்டுடன் ரெடியாகிறார் ராம் கோபால் வர்மா!
|
வாக்களிப்பீர்!
அதில், "நாடாளுமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டநத்தம், பரிவல்லிக்கோட்டை, கல்லத்திக்கிணறு கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி சின்னமாம் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன். வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கு..." என்று பதிவிட்டுள்ளார்.
ஆரத்தி எடுக்கிறார்
இது சம்பந்தமான ஒரு போட்டோவையும் தமிழிசை பதிவிட்டுள்ளார். அதில் தமிழிசை வாக்கு கேட்க சென்ற அந்த பகுதி முழுவதும் கும்மிருட்டாக உள்ளது. சுற்றிலும் பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டுள்ளனர். ஒரு வீட்டின் முன்பு ஓட்டு கேட்டு சென்ற தமிழிசைக்கு ஒரு பெண்மணி ஆரத்தி எடுக்கிறார்.
|
ஒளியிலே.. தெரிவது
அப்போது அந்த ஆரத்தி வெளிச்சத்தில் தமிழிசை பளிச்சென தெரிகிறார். அப்போது "ஒளியிலே தெரிவது தேவதையா" என்ற பாடல் நினைவுக்கு வருவதாக ஒருவர் ட்வீட் போட்டு பாட்டாகவே பாடிவிட்டார்.
தாமரைகள்
இது போல நிறைய போட்டோக்களில் தமிழிசை தாமரை பூக்களை கையில் வைத்துள்ளார். ஒருத்தர் அவருக்கு தாமரை பூ மாலையே போட்டுவிட்டார்! ஆக மொத்தம் தாமரைகளுக்கு நடுவேதான் தமிழிசையின் தூத்துக்குடி பிரச்சாரம் மணக்க மணக்க வலம் வருகிறது.