சிறுநீரக கோளாறு.. சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மகராசனை நேரில் சந்தித்து தமிழிசை ஆறுதல்
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு வரும் சிறுவனை சந்தித்து நலம் விசாரித்தார் தமிழிசை
Recommended Video
தூத்துக்குடி: சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ஏற்பாடு செய்துள்ளார்.
தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் தமிழிசை சவுந்தராஜன். அப்போது தொகுதி மக்களிடம் வெகு இயல்பாக பேசி மக்களை கவர்ந்தார்.
அந்த சமயத்தில் மகராசன் என்ற சிறுவனை சந்தித்திருக்கிறார். அப்போது சிறுவன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழிசைக்கு தெரியவந்தது.
இதையடுத்து, சிறுவனின் இலவச சிகிச்சைக்கு குலசேகரத்தில் மூகாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழிசை சவுந்தராஜன் ஏற்பாடு செய்தார். அங்கு சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தமிழிசை சவுந்தராஜன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும் சிறுவனின் பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார்.
அமேதி மக்கள் என் குடும்பம்.. என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.. ராகுல் காந்தி உருக்கம்
இது சம்பந்தமான ட்வீட்டில், "தூத்துக்குடியில்..பிரச்சாரத்தின்போது.. சந்தித்த... மகராசன். சிறுநீரக.. சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடு..செய்ததினால். இன்று குலசேகரத்தில்..மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில்.
தூத்துக்குடியில்..பிரச்சாரத்தின் போது..சந்தித்த...மகராசன்.சிறுநீரக..சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடு..செய்ததினால்.இன்று குலசேகர த்தில்..மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில்.கட்டணமில்லாமல்..சிகிச்சை பெற்று வருகிறார்..அவரை இன்று நேரில் சென்று நலம் விசாரித்தேன்..நலம் பெற வேண்டும் pic.twitter.com/cTJadxP7gf
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 3, 2019
கட்டணமில்லாமல்..சிகிச்சை பெற்று வருகிறார்.. அவரை இன்று நேரில் சென்று நலம் விசாரித்தேன்..நலம் பெற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.