அதிகாலையில் திருச்செந்தூர் சென்ற தமிழிசை.. சத்ரு சம்ஹார பூஜை நடத்தி வேண்டுதல்.. இதுதான் காரணம்!
லோக்சபா தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று அதிகாலை திருச்செந்தூர் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை நடத்தினார்.
தூத்துக்குடி: லோக்சபா தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று அதிகாலை திருச்செந்தூர் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை நடத்தினார்.
தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இதையடுத்து தமிழிசை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார்.
தூத்துக்குடியில் திமுக கூட்டணி சார்பாக திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி போட்டியிடுகிறார். இவர்களுக்கு இடையில் மிக கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருநாவுக்கரசு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.. தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்.
சிறப்பு பூஜை
இதனால் இப்போதே தூத்துக்குடி தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. இந்த நிலையில்தான் இன்று அதிகாலை திருச்செந்தூரில் தாழிசை சிறப்பு பூஜை நடத்தி உள்ளார். தமிழிசை சார்பாக நேற்றே இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இன்று காலை பூஜை நடந்தது.
வெற்றி
அதிகாலை 5 மணிக்கு இந்த பூஜை திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடத்தப்பட்டது. லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற வேண்டி தமிழிசை சார்பாக இந்த பூஜை நடத்தப்பட்டது. பூஜைக்கு பின்பாக தமிழிசை கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
நோக்கம்
இந்த பூஜையின் பெயர் சத்ரு சம்ஹார பூஜை என்பதாகும். எதிரிகளை தோல்வி அடைய செய்து வெற்றியை கொண்டு வருவதற்கான பூஜை இது என்று கூறுகிறார்கள். தூத்துக்குடியில் மிகவும் கடுமையான போட்டி நிலவுவதால் தமிழிசை இந்த பூஜையை செய்ததாக கூறப்படுகிறது.
சூப்பர்
இந்த பூஜை சுமார் 1.30 மணி நேரம் நடந்தது. பாஜக நிர்வாகிகள் பலர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். நாளையில் இருந்து தமிழிசை தனது பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.