பூ மழை தூவி... வசந்தங்கள் வாழ்த்த.. தூத்துக்குடியை கலக்கும் தமிழிசை.. அப்ப கன்பர்ம் போல!
தூத்துக்குடி கூட்டங்களில் தமிழிசை சவுந்தராஜன் கலந்து கொண்டார்.
தூத்துக்குடி: அப்படின்னா தூத்துக்குடியில் தமிழிசை நிற்கபோவது கன்பார்ம் போல இருக்கு! எப்படி கனிமொழி பெருவாரியான கூட்டத்தில் பங்கெடுத்து வருகிறாரோ அதேபோல தமிழிசையும் இறங்கிவிட்டார்!
நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இது சம்பந்தமாக 2 ட்வீட்களையும் பதிவிட்டு நிகழ்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டிருந்தார்.
இன்றும் திருச்செந்தூர் பகுதிக்கு தமிழிசை சென்ற சம்பவத்தையும் ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். அதில் "மாவட்டம் திருச்செந்தூா் சட்டமன்ற தொகுதி தென்திருப்பேரையில் அன்பு சகோதர,சகோதரிகளின் சிறப்பானதொரு வரவேற்பு..." என்று பதிவிட்டுள்ளார். ஆக... தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது கன்பர்ம்ட் ஆகி வருகிறது.
தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணி கட்சிகளுக்கு பித்தம் தலைக்கேறும்.. பொன் ராதாகிருஷ்ணன் தாக்கு!
|
போட்டோக்கள்
இந்த ட்வீட்டுகளில் அந்தந்த இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் போட்டோக்களை தமிழிசை பதிவிட்டுள்ளார். ஒவ்வொன்றிலும் தமிழிசையை வரவேற்பதும், அவருக்கு மாலை அணிவிப்பதும், என கூட்டம் களை கட்டுகிறது.
கார்
இதாவது பரவாயில்லை.. இன்று பதிவிட்ட வீடியோ ஒன்றில் கார் கதவை திறந்துவிட்டு உள்ளிருந்தபடியே எழுந்து நிற்கிறார். ஒரு கையால் கார் கதவை பிடித்தும், மற்றொரு கையால் வரவேற்கும் மக்களை பார்த்தும் கை அசைக்கிறார்.
சால்வைகள்
சுற்றிலும் பூ மழைதான்... கார் முழுக்க பூக்கள் சிதறி விழுகின்றன. பிறகு ஒரு கையால் கார் கதவை பிடித்து கொண்டே அப்படியே ஒரு ஜம்ப்... கீழே இறங்கியதும் சால்வைகள் போர்த்தப்படுகின்றன. தாரை தப்பட்டைகள் முழக்கம் கேட்டு கொண்டே இருக்கிறது. சுற்றிலும் செல்போன்களை வைத்து செல்பிகள், போட்டோக்களும் மக்கள் எடுத்து தள்ளுகிறார்கள்.
ஆரத்திக்கு ரூ.2000
அங்கிருந்து நகர்ந்து கட்சி கொடியேற்றிவிட்டு திரும்பி செல்லும்வரை தமிழிசை மீது சாமந்திபூக்கள் வீசப்பட்டே இருந்தன. தமிழிசை மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தார். அதில் சாமந்தி பூக்களும் வீசப்பட்டதால் முழுவதுமாக மஞ்சள் நிறமாக காட்சியளித்தார். இந்த ட்வீட்டிக்கு கீழே "ஆரத்திக்கு 2000 குடுக்கல, குவாட்டர்க்கு பணம் தரல, இது நாட்டிற்காக சேர்ந்த கூட்டம்" என்று கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.