டிடிவி தினகரனுடன் திமுக கூட்டணி வைத்துள்ளதா?... தமிழிசைக்கு கனிமொழி தந்த பதில் இதுதான்
தூத்துக்குடி: திமுகவிற்கு யாருடனும் மறைமுகமாக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மக்கள் ஸ்டாலின் மீதும், திமுக மீதும் தான் நம்பிக்கையில்லாமல் உள்ளனர். நிச்சயம் கனிமொழி தூத்துக்குடியில் வெற்றி பெறப்போவதில்லை, திமுகவும் வெற்றி பெறப்போவதில்லை. டிடிவி தினகரனும், திமுகவும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதற்கு, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அதே போல், உள்ளாட்சித் தேர்தலில் 60 க்கு 40 என்கிற விகிதத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தாம் கூட்டணி உள்ளது என்று டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார். இதற்கிடையே, 4 தொகுதி இடைத்தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் திண்ணைப் பிரச்சாரத்தில், தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கனிமொழி.
முன்னதாக, தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வ.உ.சி கல்லூரியில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம்.. ஸ்டாலின் பேச்சு.. அதை திறந்ததே நீங்கதானே.. தமிழிசை பதிலடி!
வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஜெயக்குமார் சட்டமன்ற உறுப்பினர் கதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டனர்.