தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரக்கு வாகனம் ஏற்றி ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கொலை - குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டார். கொலையாளியை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் அவர் விளாத்திக்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: காவல் நிலைய உதவி ஆய்வாளரை சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்து விட்டு மது போதை ஆசாமி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. கொலையாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய கொலையாளி முருகவேல் விளாத்திக்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலு. ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட சரக்கு வாகனம் ஓட்டிய முருகவேல் என்பவரை தடுத்து நிறுத்தினார்.

Thoothukudi : Earl police Sub Inspector murder

வழக்கமான சோதனையில், வாகனம் இயக்கி வந்த முருகவேல் குடிபோதையில் இருப்பது தெரியவர, அவரிடமிருந்து வாகனத்தைப் பறிமுதல் செய்த எஸ்.ஐ. ஓட்டுநரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

நள்ளிரவு 02.00 மணி அளவில் மற்றொரு சரக்கு வாகனத்தை இயக்கி வந்த முருகவேல், வாகனச் சோதனை செய்துகொண்டிருந்த எஸ்.ஐ.பாலு மீது ஏற்றிக் கொலை செய்து விட்டுத் தப்பியோடினார். நள்ளிரவு நடந்த கொலை சம்பவர் ஏரல் காவல் நிலைய காவலர்களை மட்டுமின்றி தமிழக காவல்துறை அதிர்வலைகளை உருவாக்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகளால் காவலர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி முறப்பநாடு நாடு அருகே மணக்கரை பகுதியில் இரட்டைக்கொலை தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் சென்ற போது ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று, நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் காவலர் சுப்ரமணியன் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

இப்போது உதவி ஆய்வாளரை சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்துள்ளார் போதை ஆசாமி முருகவேல். தப்பியோடிய கொலையாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகளால் காவலர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

இதனிடையே காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவை கொன்ற முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தப்பியோடிய குற்றவாளி முருகவேலை பிடிக்க, 10 தனிப்படை அமைக்கப்பட்டநிலையில் குற்றவாளியே தானாக வந்து சரணடைந்துள்ளார்.

இறந்த உதவி ஆய்வாளருக்கு ஒரு ஆண், ஒரு பெண், பேச்சியம்மாள் என்ற மனைவியும் உள்ளனர். இவர் முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர். இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற காவலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

English summary
Sub Inspector of Earl Police Station near Srivaikuntam was killed by a vehicle. 10 personnel are set to catch the killer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X