விடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய தொடர் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக நேற்று இரவு முதல் விடிய விடிய தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலையும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் வெப்பச்சலனத்தால் அடிக்கடி மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்
நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையினால் பாபநாசம், சேர்வலாறு, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.