சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் பேசியது ஏன்.. கனிமொழி விளக்கம்
Recommended Video
தூத்துக்குடி: கட்சியின் வளர்ச்சிக்காகவே சர்வாதிகாரியாக செயல்படுவேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததாக தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக் குழு கூட்டம் சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஸ்டாலின் கூறுகையில் அனைவரும் ஒத்துழைத்தால்தான் வெற்றி கிட்டும். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்காக முடிவெடுக்க வேண்டும் என்றால் நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என பேசியிருந்தார்.
இந்த நிலையில் சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் சொன்னதை அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இதுகுறித்து தூத்துக்குடியில் எம்பி கனிமொழி கூறுகையில் உள்ளாட்சி தேர்தல் நிச்சயமாக நடைபெற வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக உள்ளது.
எங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்!
திமுக தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளது. திமுக கொடுத்த அழுத்தத்தினால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. கட்சியின் வளர்ச்சிக்காக முடிவெடுக்க வேண்டும் என்றால் அதை தைரியமாக தெளிவாக எடுக்க வேண்டும்.
அதற்காக நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் கூறியிருந்தார். அதை அரசியல் காரணங்களுக்காக புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்றார் கனிமொழி.