இப்போ மட்டும் எதுக்கு வந்தீங்க? தூத்துக்குடியில் தமிழிசையிடம் வாக்குவாதம் செய்த மக்கள்.. வீடியோ!
தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்ய சென்ற பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதம் செய்து சண்டையிட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்ய சென்ற பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதம் செய்து சண்டையிட்டு இருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் திமுக கூட்டணி சார்பாக திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
இவர்களுக்கு இடையில் மிக கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் தூத்துக்குடியில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
தமிழிசையின் வேட்புமனு நீண்ட இழுபறிக்குப் பிறகு ஏற்பு... ஆனா.. அமமுக வேட்பாளர்கள்
என்ன சண்டை
இந்த நிலையில் தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்ய வந்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். தமிழிசை அங்கு பிரச்சாரம் செய்ய வரக்கூடாது. இப்போது மட்டும் அவர் ஏன் இங்கு வருகிறார் என்று மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
|
துப்பாக்கி சூடு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது எதுவும் செய்யாதவர் இப்போது மட்டும் ஏன் ஓட்டு கேட்டு வருகிறார் என்று மக்கள் அவரிடம் சண்டையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்கு வந்து சமாதானம் செய்து, தமிழிசையை பிரச்சாரம் செய்ய வைத்தனர்.
வீடியோ வைரலானது
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது, தமிழிசை பேசிய செய்தியாளர் சந்திப்பு ஒன்று இணையத்தில் வைரலானது. 1000 பேர் சாக வேண்டியது, நல்ல வேளையாக 13 பேர் மட்டுமே இறந்து இருக்கிறார்கள் என்று தமிழிசை அதில் குறிப்பிட்டு இருந்தார். இது மீண்டும் வைரலாகி பெரிய சர்ச்சையானது.
யாருக்கு அரியணை?முடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு
எச்.ராஜா
இப்படித்தான் நேற்று சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பிரச்சாரம் செய்யும் போது அங்கிருந்த மக்கள் அவரை பார்த்து ''பெரியார் வாழ்க'' என்று கோஷமிட்டு இருக்கிறார்கள். அங்கிருந்த மக்கள் தொடர்ந்து பெரியார் வாழ்க வாழ்க என்று கத்தினார்கள். எச்.ராஜா சில நொடிகள் தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு பின் தொடர்ந்து பேசினார். இதனால் நேற்று சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது.