அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. கடம்பூர் ராஜு முன் சண்டை போட்ட அதிமுகவினர்.. ஒரே அடிதடி!
தூத்துக்குடியில் அதிமுகவை சேர்ந்த இரண்டு கோஸ்டியினர் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அதிமுகவை சேர்ந்த இரண்டு கோஸ்டியினர் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விளாத்திகுளம் தொகுதி புதூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் கோஸ்டிகள் மோதல் அடிதடியில் ஈடுப்பட்டு இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோரை முன்னாள் எம்.எல்.ஏ வும் அதிமுக செய்திதொடர்பாளருமான மார்க்கண்டேயன், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவும் ,கலை இலக்கிய அணி மாநில செயலாளருமான சின்னப்பன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர்.
கூட்ட மேடை ஏறியவுடன் ஒரு கோஷ்டியினர் மார்க்கண்டேயனை முதலில் பேச சொல்லுங்கள் என குரல் எழுப்பினர், சிலர் சின்னப்பனை முதலில் பேச சொல்லுங்கள் என்று கூறினார்கள். இரண்டு தரப்பினரும் இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதினர்.
இதை பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜு செய்வதறியாது திகைத்தார். அந்த நேரம் பார்த்து இருகோஷ்டியினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். அமைச்சர் கடம்பூர் ராஜும் மேடையில் இருந்து இறங்கி தகறாரு கூட்டத்தில் புகுந்து குரல் எழுப்பினார்.
ஆனால் அவர்கள் கடம்பூர் ராஜுவின் பேச்சை கேட்கவில்லை. இருகோஸ்டிகளும் ஆவேசமாக சண்டையிட்ட நிலையில் போலீசார் அமைச்சரை பாதுகாப்பதிலும் கூட்டத்தை கட்டீப்படுத்துவதாலுமாக பாடுபட்டனர். அதன்பின் அமைச்சர் கடம்பூர் ராஜு பாதியில் அங்கிருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.