மே தினம்.. சிவப்பு சட்டையில் தூத்துக்குடியை கலக்கிய ஸ்டாலின்.. செஞ்சட்டை உணர்த்துவது என்ன?
சென்னை: உழைப்பாளர்களின் தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் உள்ள உழைப்பாளர்கள் சிலை உள்ள இடத்துக்கு சிவப்பு சட்டையில் பேரணி சென்றார்.
உழைப்பாளர்கள் இல்லாத நாடு இல்லை என்பதை எடுத்துரைக்கவும் அவர்களது வலிமையை போற்றவும் உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே தின பேரணியில் கலந்து கொண்டார்.
ஸ்டாலின், உங்க மேல மக்களுக்கே நம்பிக்கையில்லை.. சட்டைக் கிழிப்பு.. போட்டி சட்டசபை.. தமிழிசை நக்கல்!
திமுகதான் காவலாளி
அந்த பேரணியில் ஸ்டாலின் பேசுகையில் தொழிலாளர்களுக்கு திமுகதான் காவலாளி. அவர்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே திமுகதான் காவலாளி என்றார்.
ஆடை
திமுக தலைவர் ஸ்டாலின் சிவப்பு சட்டை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உழைப்பாளர்களின் நிறம் சிவப்பு என்பதால் அத்தகைய ஆடையை அவர் அணிந்திருக்கலாம்.
சிவப்பு நிற ஆடைகள்
ஏழை பங்காளன் என கூறி கொள்வதை போல் தான் தொழிலாளர்களின் பாதுகாவலன் என கூறிக் கொள்ளவே அவரும் இன்னும் சில திமுகவினரும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தனர்.
ஸ்டாலின்
மேலும் தாங்கள் உழைக்காமல் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க முயற்சிக்கவில்லை. உழைப்பாளர்களை போல் வியர்வை சிந்தி உழைத்து தேர்தலில் வெற்றி பெற்றே ஆட்சியை பிடிக்க விரும்புகிறோம் என ஸ்டாலின் சொல்லாமல் சொல்வது போல் இருந்தது அந்த செஞ்சட்டை பேரணி.