தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உடல்நிலை சரியில்லாத உமா.. இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பிரபு.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி!

Google Oneindia Tamil News

கோவில்பட்டி: இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை மனைவி ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு (38). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி உமாமகேஸ்வரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

Wife murdered husband in Kovilpatti

இந்நிலையில் இன்று அதிகாலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் உமாமகேஸ்வரி, பிரபுவை வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அங்கு பிரபுவின் உடலை உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உமாமகேஸ்வரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உமா மகேஸ்வரியின் உடல்நலனை காரணம் காட்டி பிரபு 2வது திருமணம் செய்ய முயன்றதால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Wife murdered husband in Kovilpatti. Police arrested the former and investigation going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X