பயணத்தை கேன்சல் செய்வதில் தகராறு.. பயணியின் மூக்கை உடைத்த கால் டாக்சி டிரைவர்!
பெங்களூருவில் கால் டாக்சி டிரைவர் பயணியின் மூக்கை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் ஒரு கால் டாக்கி ஓட்டுனருக்கும், பயணிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் பயணியின் மூக்கு உடைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
பெங்களூருவை சேர்ந்த ஒருவர் கெம்பகௌடா விமான நிலையத்திற்கு செல்வதற்காக ஊபர் செயலியில் கால் டாக்சி புக் செய்துள்ளார். புக்கிங்கை ஏற்றுக்கொண்ட ஓட்டுனர் ஒருவர் பயணி குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பயணியிடம் ஓட்டுனர் செயலிழியில் குறிப்பட்ட தொகைக்கு மேல் தரவேண்டும் என வற்புறுத்தியதாகக் கூறப்பிடுகிறது. இதனால் அந்த பயணி கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து புக்கிங்கை கேன்சல் செய்யும் படி பயணியை ஓட்டுனர் நிர்பந்தித்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே, இருவருக்குள்ளும் சண்டை ஏறபட்டுள்ளது. அப்போது கால் டாக்சி ஓட்டுனர், பயணியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டுள்ளார். இதனால் பயணியின் மூக்கு உடைந்து, குபுகுபுவென ரத்தம் கொட்டியது.
இதையடுத்து அந்த பயணி ஊபர் ஓட்டுநனர் மீது போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.