வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏற்கனவே 2.. இதில் 3வதாக முருகனுடன் தொடர்பு.. பெற்ற பிள்ளையை 1 லட்சத்துக்கு விற்ற சத்யா!

பெற்ற குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பெற்ற பிள்ளையை 1 லட்சத்துக்கு விற்ற சத்யா!-வீடியோ

    வேலூர்: ஏற்கனவே 2 கணவன்கள்.. 3-வதாக முருகனுடன் தொடர்பில் இருக்கும் சத்யா, பெற்ற குழந்தையை யாருக்கும் தெரியாமல் விற்று.. அட்வான்ஸ் வாங்கி உள்ளார்.

    வாணியம்பாடி பகுதியில் பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற தாய் கணவர் புகாரின்பேரில் குழந்தையை மீட்டு வாணியம்பாடி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    1 year old male child sold Rs 1 lakh and mother arrested

    வாணியம்பாடி பகுதியில் பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற தாய் கணவர் புகாரின்பேரில் குழந்தையை மீட்டு வாணியம்பாடி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    இப்போது மூன்றாவதாக முருகன் என்பவருடன் தொடர்பில் இருக்கிறார். இவர்களுக்கு ஒரு வருடத்துக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சமயத்தில், முருகனுக்கு காசநோய் வந்துவிட்டது. அதனால், தர்மபுரி ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்து கொண்டு, திரும்பவும் ஊர் திரும்பினார்.

    ஊருக்கு வந்து பார்த்தால், குழந்தையை காணோம். இதை பற்றி சத்யாவிடம் கேட்டதற்கு, சரியான பதில் இல்லை. மழுப்பலாகவே பேசி கொண்டிருந்ததால், முருகன் பொறுமையிழந்து, வாணியம்பாடி கிராமிய போலீசாரிடம் புகார் தந்தார்.

    1 year old male child sold Rs 1 lakh and mother arrested

    போலீசாரும் சத்யாவை அழைத்து விசாரித்தபோதுதான் குட்டு வெளிப்பட்டது. "என் பெரியம்மா கீதா மூலமா கவிதான்னு ஒரு புரோக்கர் எனக்கு அறிமுகம் ஆனாங்க. குழந்தையை பெங்களூரை சேர்ந்த ரஹமத் சகிலா தம்பதியினர் கேட்பதாக சொன்னாங்க. அதனால குழந்தையை 2 மாசத்துக்கு முன்னாடியே.. ஒரு லட்சத்துக்கு வித்துட்டேன். 65 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸும் வாங்கிட்டேன்" என்றார்.

    ஒரு நிமிஷம் இருங்க.. காக்க வைத்து விட்டு.. கத்தியுடன் பாய்ந்த மணிகண்டன்.. ரவுடி என்கவுன்டரில் பரபர!ஒரு நிமிஷம் இருங்க.. காக்க வைத்து விட்டு.. கத்தியுடன் பாய்ந்த மணிகண்டன்.. ரவுடி என்கவுன்டரில் பரபர!

    இதையடுத்து போலீசார், பெங்களூர் ஜெயநகர் பகுதிக்கு விரைந்தனர். சத்யா சொன்ன தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர். குழந்தையை விலைக்கு வாங்கி சென்ற ரஹமத் சகிலா தம்பதியினர், குழந்தையை விற்க உதவிய பெரியம்மா கீதா, புரோக்கர் கவிதா, முக்கியமாக குழந்தையின் தாய் சத்யாவை கைது செய்தனர்.

    English summary
    Mother arrested including Grand mother and broker for 1 year old male child sold Rs 1 lakh near Vaniyambadi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X