வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

23 வயசு மஞ்சுளா.. ஏற்கனவே ரெண்டு.. 3-வது புருஷனும் ரெடி.. குழந்தையால் தொந்தரவு.. கொன்ற கொடூரம்!

வேலூர் அருகே 2-வயது குழந்தையை கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

வேலூர்: ஏற்கனவே ரெண்டு.. இதில் மூன்றாவது கல்யாணத்துக்கு ரெடியானார் மஞ்சுளா.. ஆனால் தன்னுடைய 2 வயது குழந்தை தொந்தரவாக இருக்கவும் அந்த குழந்தையை கொலையே செய்துவிட்டார்!

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கம்மவான்பேட்டை அருகே உள்ள மொட்டைமலை மீது முருகன் கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் வேலைக்காக ஊழியர்கள் மலை மீது ஏறி சென்றிருக்கிறார்கள்.

அப்போதுதான், பள்ளத்தில் 2 வயது குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.. அது ஒரு பெண் குழந்தை.. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தந்தனர்.

Shock crimes 2019: கள்ளக்காதலியின் 3 மகள்களை கொன்று.. சடலங்களுடன் உறவு.. 4 ஆயுள் தண்டனை!Shock crimes 2019: கள்ளக்காதலியின் 3 மகள்களை கொன்று.. சடலங்களுடன் உறவு.. 4 ஆயுள் தண்டனை!

சடலம்

சடலம்

போலீசாரும் விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு, அந்த குழந்தை யாருடையது என்று விசாரித்தனர். அப்போதுதான் ஆற்காடு அடுத்த தாழனூரை சேர்ந்த தங்கமணியின் குழந்தை காணாமல் போனதாக தெரியவந்தது. குழந்தை காணவில்லை என்றதுமே குழந்தையின் தாய் மஞ்சுளாவிடம்தான் விசாரணை ஆரம்பமானது.

மஞ்சுளா

மஞ்சுளா

மஞ்சுளாவுக்கு 23 வயசு.. அப்போதுதான், மஞ்சுளாவுக்கு தன் தாய்மாமனுடன் முதல் கல்யாணம் நடந்துள்ளது.. பிறகு மதுரையை சேர்ந்த பாண்டியனை 2-வது கல்யாணம் செய்துள்ளார். இவர்களுக்கு பிறந்ததுதான் அந்த பெண் குழந்தை. ஆனால் பாண்டினை பிரிந்துவந்துவிட்டார்.

கொலை

கொலை

கையில் குழந்தையுடன் அம்மா வீட்டில் தங்கி உள்ளார்.. இந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த ராஜாமணி என்பவருடன் மஞ்சுளாவுக்கு லவ் வந்துவிட்டது. இவர்களது கல்யாணத்துக்கு குழந்தை இடைஞ்சலாக இருக்கும் என்று நினைத்துதான் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார்.

கைது

கைது

கடந்த 22ம் தேதி ராஜாமணியை கூடவே அழைத்து சென்று, கம்மவான்பேட்டை மலையில் இருந்து வீசினர்.. குழந்தை இறந்துவிட்டதும், அதன் சடலத்தின்மீது பாறாங்கல் போட்டும் மூடி வைத்துள்ளனர்.. குழந்தையை கொன்ற மறுநாளே மஞ்சுளாவுக்கு 3-வது கல்யாணம் ஆகிஉள்ளது.. இப்போது இந்த புதுமண தம்பதி ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டுள்ளனர்.

English summary
23 year old woman got third marriage after killed her 2 year baby near vellore and arrested including husband
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X