பழைய பிரியாணியை சூடு செய்து சாப்பிட்டதால் வந்த வினை.. அரக்கோணத்தில் 5 வயது சிறுமி பலி
அரக்கோணம்: பழைய பிரியாணியை சூடு செய்து சாப்பிட்டதால் வந்த வினையாக அரக்கோணத்தில் 5 வயது சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தண்டலம் புது காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி கனகா. இவர்களது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் தயாரிக்கப்பட்ட பிரியாணி மீதமாகிவிட்டது.
இதனால் சீனிவாசனின் குடும்பத்தினர் அதை பெற்றுக் கொண்டு பிரிட்ஜில் வைத்தனர். அடுத்த நாள் அந்த பிரியாணியை மீண்டும் கடாயில் போட்டு வதக்கியுள்ளனர்.
பின்னர் அந்த பிரியாணியை சீனிவாசன் குடும்பத்தினரும், அவரது மகள் கோபிகா உள்பட 4 சிறுவர்களும் சாப்பிட்டுள்ளனர். இதில் 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
முடியலண்ணே.. முடியலை.. அடிக்கிற வெயிலைப் பார்த்தா தமிழ்நாடு தனியா சுத்துது போல #வெயில்
இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் கோபிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?