வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னங்க இது.. அழுது அடம்பிடிச்சு ஓட்டு கேட்கிறாரே "அக்ரி".. ரொம்ப வித்தியாசமா இருக்கே!

திருப்பத்தூர் கூட்டத்தில் அழுதுகொண்டே அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கண்ணீர் விட்டு அழுது ஓட்டு கேட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி-வீடியோ

    திருப்பத்தூர்: செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கலாம்.. அல்லது செய்ய போறதை சொல்லியாவது ஓட்டு கேட்கலாம்.. ஆனால் கண்ணீர் விட்டு அழுது ஓட்டு கேட்கலாமா? அப்படித்தான் இவர் கேட்டிருக்கிறார்!

    திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இன்னமும் இவர் மீது மாவட்டத்தில் அதுதொடர்பான வடுக்கள் மாறாமல் உள்ளது.

    மேலும் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நேரடியாக தூக்கி அடிக்கப்பட்டவர் என்ற சம்பவமும் மக்கள் மனதில் நினைவில் உள்ளது.

    சிரி, சிரிச்சுட்டே இரு.. உம்முன்னு இருக்காதே.. மகனுக்கு ப.சிதம்பரம் கொடுத்த செம டிப்ஸ் சிரி, சிரிச்சுட்டே இரு.. உம்முன்னு இருக்காதே.. மகனுக்கு ப.சிதம்பரம் கொடுத்த செம டிப்ஸ்

    அதிமுக தலைமை

    அதிமுக தலைமை

    ஜெயிலுக்கு போய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் அக்ரி கிருஷ்ணமுர்த்தியை ஜெயலலிதா கட்சியில் கடைசிவரை சேர்க்கவே இல்லை. ஆனால், அவர் மறைவுக்கு பிறகு உள்ள அதிமுக தலைமையோ, இவரது இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டதுடன், தொடர்ந்து நெருக்கம் காட்டியே வருகிறது.

    கட்சி நிர்வாகிகள்

    கட்சி நிர்வாகிகள்

    இந்நிலையில் திருப்பத்தூரில் அதிமுக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் வீரமணிதான் இந்தக் கூட்டத்துக்கு தலைமை. இதில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டார். பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிறைய பேர் கலந்து கொண்டனர்.

    வலியை தாங்கினேன்

    வலியை தாங்கினேன்

    அந்த கூட்டத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேச ஆரம்பித்தார். "நான் தேர்தலில் பல தோல்விகளை கண்டவன். போன முறை எனக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பு தந்தார். ஆனால் நான் வெறும் 250 வாக்கு வித்தியாசத்தில் தோத்து போயிட்டேன். அந்த வலியை என்னால் மறக்கவே முடியாது. இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டேன்.

    கண்ணீர்

    கண்ணீர்

    இப்போது திரும்பவும் எனக்கு அதிமுக இன்னொரு வாய்ப்பு கொடுத்துள்ளது என்றார். இதை சொல்லும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதுவிட்டார் அக்ரி. அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது. கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்துக்கு அமைதியாக இருந்தார்.

    வெற்றி உங்களுக்குதான்

    வெற்றி உங்களுக்குதான்

    இதனால் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அக்ரி அழுவதை பார்த்து ஒரு சிலர் கண் கலங்கிவிட்டனர். உடனே பக்கத்தில் இருந்த ஒன்றிய செயலாளர் ரமேஷ் அழுது கொண்டிருந்தவரை சமாதானம் செய்தார். குடிக்க தண்ணீர் கொடுத்தார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் நீங்கள் தான் வெற்றி பெறுவது உறுதி என கரகோஷம் எழுப்ப தொடங்கி விட்டார்கள்.

    English summary
    At the Tirupaththur meeting, Agri Krishnamoorthy suddenly cried out when talking.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X