இப்போது நினைத்தாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும்.. மு. க. ஸ்டாலின் அதிரடி பேச்சு
வேலூர்: அதிமுக ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திறந்த வேனில் வாக்கு சேகரித்த அவர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு செய்த சதிகளை முறியடித்து வென்றதைப் போல வேலூரிலும் வெல்வோம். திமுக மீது களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக கூறுகிறீர்கள்; நீங்கள் (முதல்வர் பழனிசாமி) அல்வா கொடுத்து ஏமாற்றியதாக நான் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார். சூழ்ச்சியை, சதியை மக்கள் முறியடித்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
சீனாவுக்கு செக்... ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி சலுகை கிடையாது... அதிபர் டிரம்ப் ட்வீட்
மும்மொழிக் கொள்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, அதை வாபஸ் பெறவைத்தது திமுக தான் என்றும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இப்போது நினைத்தாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும்; அந்த எண்ணம் உள்ளது. காத்துக்கொண்டிருக்கிறோம் எனவும் கூறினார்.