1.900 கிராம் தங்கத்தில் பொங்கல் அடுப்பு, பானை, காளைமாடு…சாதனை படைத்த நகை தொழிலாளி
Recommended Video
ஆம்பூர்:ஆம்பூர் அருகே 1 கிராம் 900 மில்லி தங்கத்தில் பொங்கல் அடுப்புடன் கூடிய பானை மற்றும் காளைமாடு செய்து நகை தொழிலாளி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவன். அவர் ஆம்பூர் ஷராப் பாஜாரில் 35 ஆண்டுகளாக நகைத்தொழில் செய்து வருகிறார்.பரம்பரை நகைத் தொழிலாளியான இவர், கின்னஸ்சாதனைப் புரிவதற்காக மில்லி கிராம்தங்கத்தில் நுண்ணிய அளவில் பல்வேறுமாதிரி பொருட்களை திறம்பட உருவாக்கி வருகிறார்.
ஏற்கனவே மிகச்சிறிய அளவில் இந்திய வரை படத்தை உருவாக்கியிருந்தார். ஆம்பூரில் புகழ்பெற்ற காலணிகள், தங்கத்தில் தூய்மை இந்தியா மாதிரி வரைபடம், கிரிக்கெட் உலகக் கோப்பையின் மாதிரி வடிவம், திருக்குறள்சுவடி, மகாத்மா காந்தி, அப்துல்கலாம், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆகியோரின் உருவப்படங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.
தமிழக அரசின் பசுமை வீட்டையும் அவர் உருவாக்கி உள்ளார். அது மட்டுமின்றி கடந்தமாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, 3 கிராம் 700 மில்லி தங்கத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும் தத்ரூபமாக காட்டும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் உட்பட பலவற்றை உருவாக்கியுள்ளார்.
இந் நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, 1 கிராம் 900 மில்லி தங்கத்தில் மிக நுண்ணிய அளவில் மூன்று கரும்பு, பானை, அடுப்பு, விறகு,காளை மாடு, கரண்டி ஆகியவற்றைத்தத்ரூபமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார். 24 மணி நேர இடைவிடாத தொடர் முயற்சியால் இவற்றை உருவாக்கியதாக நகைத் தொழிலாளி தேவன் கூறினார்.
மேலும் கின்னஸ் சாதனையில் இடம் பெறவேண்டும். அதுவரையில் தொடர்ந்து மிக குறைந்த அளவிலான தங்கத்தில் பல பொருட்களை செய்வதாக கூறினார்.