சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளான ஆம்பூரில் போலீஸ் தடியடி.. குடியாத்தத்தில் கட்சியினர் அடிதடி
Recommended Video
ஆம்பூர்: ஆம்பூர் சட்டசபை இடைத்தேர்தல் அமமுக வேட்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் ஆம்பூரில் போலீஸார் தடியடி நிகழ்த்தினர். அது போல் குடியாத்தத்தில் அதிமுக- திமுகவினர் மோதலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் ஆம்பூரில் சட்டசபை தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கு அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் வந்தார்.
வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்!
வாக்குவாதம்
அப்போது அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் அவருடன் தகராறு செய்தனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது.
தடியடி
இதனால் அதிமுகவினர் , பாலசுப்பிரமணியத்தின் காரை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பதற்றம் நீடித்ததால் இரு தரப்பையும் போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
மோதல்
குடியாத்தத்தில் மோதல்: குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவில் அதிமுக கூட்டணி கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
பதற்றம்
கல்லூர் வாக்குச் சாவடி மையத்தில் நடந்த மோதலில் ரஞ்சித், அரவிந்த் ஆகியோர் காயமடைந்தனர். இடைத் தேர்தல்கள் நடைபெற்ற பகுதிகளில் அடுத்தடுத்து மோதல்கள் நடப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.