வேலூர் கோட்டையை கைப்பற்றினார் "DMK".. நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் பலம் 38-ஆக உயர்வு
Recommended Video
வேலூர்: வேலூரில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதை அடுத்து நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்பிக்களின் பலம் 38-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி 38 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. வேலூரில் தேர்தலுக்கு முன்பாக திமுக பிரமுகர் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதால் அந்த தொகுதிக்கு தேர்தல் ரத்தானது.
5-ஆம் தேதி தேர்தல்
இதையடுத்து மற்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் தேனி எம்பியாக ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றார். இந்த நிலையில் வேலூருக்கு எம்பி தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு நடந்தது.
முன்னிலை
இதில் திமுகவின் கதிர் ஆனந்த், அதிமுகவின் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஆரம்பத்திலிருந்து ஏசி சண்முகமும், கதிர் ஆனந்தும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.
எத்தனை வாக்குகள்
இந்த நிலை மாறி கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் அனைத்து சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டு திமுக வெற்றி பெற்றது. திமுகவின் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளையும், அதிமுகவின் ஏசி சண்முகம் 4,77,199 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 26,995 வாக்குகளையும் பெற்றனர்.
யார் வெற்றி
இந்த நிலையில் கதிர் ஆனந்த், ஏசி சண்முகத்தைக் காட்டிலும் 8,141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியின் பலம் 38 ஆக உயர்ந்துள்ளது.