வேலூரில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. செல்பி.. அசத்தும் ஸ்டாலின்!
Recommended Video
வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் நடை பயிற்சியின் போது வாக்கு சேகரித்தார்.
வேலூர் மக்களவை தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி. சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். வேலூர் தொகுதியில் மும்முனை போட்டி நடைபெறுகிறது.
திமுகவினர் வாக்கு சேகரிப்பு
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்த் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் ஆவார். கதிர் ஆனந்த்துக்கு ஆதரவு கோரி திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டாலின் நடை பயிற்சி
இந்நிலையில் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வேலூரில் இன்று பிரச்சாரம் செய்கிறார். இதன்படி இன்று காலை உழவர் சந்தை வழியே ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்.
ஸ்டாலின் செல்பி
அப்போது அங்கிருந்த காய்கறி விற்பனை செய்வோர், நடை பாதை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர்களுடன் ஸ்டாலின் செல்பி எடுத்து கொண்டார்.
நாளை பிரச்சாரம்
நாளை வாணியம்பாடி பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். நாளை மறுதினம் அணைக்கட்டு பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.