வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னா மூளை.. மதுவை லுங்கியில் வடிகட்டி குடித்த குடிக்காரர்.. பாட்டில் உடைந்ததால் புதிய டெக்னிக்

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூரில் கீழே விழுந்த மதுபாட்டிலை லாவகமாக எடுத்து அந்த மதுவை லுங்கியில் வடிகட்டிய குடிக்காரரின் வீடியோ வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் இருந்தாலு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மாநில அரசுகளுக்கு ஒரு சில தளர்வுகளை செய்து கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் 45 நாட்கள் கழித்து கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

அப்போது சில இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் சிலர் மதுவாங்கியதாகவும் கொரோனா பரவும் அச்சம் இருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மீண்டும் வேகம் எடுக்கிறது.. ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 11000ஐ தாண்டிய பாதிப்பு!மீண்டும் வேகம் எடுக்கிறது.. ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 11000ஐ தாண்டிய பாதிப்பு!

மேல்முறையீடு

மேல்முறையீடு

இதையடுத்து மதுக்கடைகளை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதால் கடந்த 9ஆம் தேதி முதல் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கடைகளில் விற்பனை

கடைகளில் விற்பனை

அப்போது மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 7 நாட்களுக்கு 7 வண்ணங்கள் கொடுக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்பட்டது.

வேலூரில் மதுவிற்பனை

வேலூரில் மதுவிற்பனை

இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து மீண்டும் கடை திறந்ததால் குடிக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வண்ணம் என்பதால் இனி அடுத்த மது பாட்டில் கிடைக்க 6 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அடித்து பிடித்து வேலூரில் மதுவாங்கினார் ஒரு மதுப்பிரியர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அப்போது மது வாங்கிய குஷியில் வந்த போது பாட்டில் கீழே விழுந்து உடைந்துவிட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழியானது. இதனால் சற்று தளராத அந்த நபர் தனது லுங்கியின் மூலம் அந்த உடைந்த பாட்டிலில் இருந்த மதுவை லாவகமாக வடிகட்டி குடித்தார். இதை பார்த்த மற்ற குடிக்கார்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Recommended Video

    இந்த முறையும் டாஸ்மாக்கை கைவிடாத மதுரை குடிமகன்கள்.. வசூல் சாதனை.. முழு லிஸ்ட்
    கவலைப்படாத நபர்

    கவலைப்படாத நபர்

    இந்த வீடியோ வைரலாகி வருகிறது. லுங்கியில் வடிகட்டினாலும் கண்ணாடி துகள் தொண்டையினுள் சிக்கிவிட்டால் என்ன ஆகும் என்பதை பற்றி கவலைப்படாத அந்த நபர் இவ்வாறு செய்தது காண்போரை உறைய வைத்தது.

    English summary
    Drunkard filters liquor from broken bottle in Vellore. Video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X