ஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை!
வேலூர்: ஆம்பூரில் கனமழை பெய்து வருவதால் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவையில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்தது.
தற்போது தமிழகத்தில் அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கியது. இதில் வேலூரில் அதிகபட்ச மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. மேலும் ஆம்பூரில் கொட்டோ கொட்டுனு மழை பெய்கிறது.
Heavy rains over Ambur in Vellore district resulting in huge traffic delays in and around Ambur. Chennai - Bangalore National Highway completely submerged in rain water. @lovelyweather_ @ChennaiRains @praddy06 @sunnewstamil @Tamilnadurains #Chennairains #Tamilnadurains #flooding pic.twitter.com/TFI6nfAuLS
— Sabil Ahmed (@itz_sabil) August 18, 2019
இதனால் வாணியம்பாடியில் உள்ள ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்பூரில் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.
இதனால் ஆம்பூரை சுற்றியுள்ள இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
பார்ப்பதற்கு ஏதோ கிராமத்து சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதை போல் காட்சியளிக்கிறது. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.