வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்கள் உழைத்து மேலே வந்திருக்கிறோம்.. திமுகவில் வாரிசு அரசியல் தொடர்கிறது.. முதல்வர் பழனிசாமி

Google Oneindia Tamil News

ஆம்பூர்: திமுகவில் வாரிசு அரசியல் தொடர்கிறது, ஆனால் நாங்கள் உழைத்து தான் மேலே வந்திருக்கிறோம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் யாரால் நிறுத்தப்பட்டது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.

Heirloom politics continues in DMK, Chief Minister Palanisamy campaign

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தான் ஆள்வதற்கு சிறந்த கட்சி என்பதை மக்கள் உறுதிப்படுத்தி உள்ளதாக கூறினார். இந்தியாவில் எந்த அரசும் செய்யாத நலத்திட்டங்களை அதிமுக அரசு தமிழகத்தில் செய்துள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

கலாமின் கனவு மெய்ப்பட அனைவரும் அயராதுழைப்போம்.. ஓ. பன்னீர்செல்வம் புகழஞ்சலி கலாமின் கனவு மெய்ப்பட அனைவரும் அயராதுழைப்போம்.. ஓ. பன்னீர்செல்வம் புகழஞ்சலி

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 6 சட்டக்கல்லூரிகளை தொடங்கி இருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களின் எண்ணங்கள் முழுவதும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்றும் திமுகவில் வாரிசு அரசியல் தொடர்கிறது, ஆனால் நாங்கள் உழைத்து தான் மேலே வந்திருக்கிறோம் எனவும் பேசினார்.

English summary
Chief Minister Palanisamy Said that Heirloom politics continues in DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X